RSS

பலநேரங்களில் மற்றவர்களுக்காகவும், சிலநேரம் என் திருப்திக்காகவும் எழுதுவேன்!

திரைக்கடல்!

'கடல்' படத்தை பத்திய விமர்சன போஸ்ட்டுன்னு நீங்க நினைச்சீங்கன்னா நான் அதுக்கு வேற லின்க் குடுக்குறேன். இந்த போஸ்ட்ல எனக்கு 'கடல்' படம் பார்த்து மனசுல பட்டதை மட்டுமே எழுதுறேன். இதை நான் ட்விட்லாங்கராவோ பேஸ்புக்ல ஸ்டேட்டஸாவோ போடலாமுன்னு தான் முதல்ல நினைச்சேன். அப்புறம் தான் சரி எதுக்கு இங்க சிவனேன்னு ஒன்ன ஓப்பன் பண்ணிவச்சிட்டிருக்கேன்? இந்த மாதிரி டைம்ல யூஸ் பண்ணிக்கிட்டா தான் உண்டுன்னு இதுல போஸ்ட் பண்றேன்.



இன்றைக்கு நான் இருந்த கடுப்புக்கு அலெக்ஸ் பாண்டியன் போட்டாக்கூட பேக் டூ பேக் ஷோஸ் பார்த்திருப்பேன். அதனால 'கடல்' பாக்க போறப்போ ஏதோ திரைப்பட திருவிழாவுக்கு போறமாதிரியே ஃபீல் பண்ணேன். எனவே உங்கள் விமர்சனங்களோ, மரண மொக்கை போன்ற ட்வீட்கள்/ ஸ்டேட்டஸுகளோ எனக்கு துச்சமாகப்பட்டது. சாதா நாளில் 70 ரூபாய்க்கு விற்கப்படும் பால்கனி டிக்கெட் இன்று 100 ரூபாய், சரியென்று பால்கணிக்கே டிக்கெட் எடுத்தேன். இது மணி சாருக்காக இல்ல, நிறைய ஃபிகர்ஸ் அங்க தான் இருந்தாங்க.

படம் ம்ம்...ஓகே! எனக்கு நல்லாவேயிருந்தது. இண்டர்வல் வரைக்கும் “செம” ரீதி, அதுக்கப்புறம் ’ஓகே’விலிருந்து ‘சுமார்’. படத்தில எனக்கு பிடித்த விஷயம் ரகுமான், ராஜீவ் மேனன், அரவிந்த்சாமி. பிடிக்காத விஷயம் மணி-ஜெமோ காம்போ, அர்ஜூன் அல்லது அவரது dull characterization. மணி மற்றும் ஜெமோ தனித்தனியே மிகவும் திறமைசாலிகள். ஆனால் ஜெமோ புத்தகத்தில் வார்த்தைகளால் எளிமையாக வடிவமைக்க முடிந்த/முடிகிற சில விசயங்களை படம் பார்க்கிறவர்களுக்கு எஃபெக்ட்டிவ்வாக கொண்டுச்சேர்க்க
சிறிது மெனக்கெட்டாலும் பல காட்சிகளில் தோல்விகளாகவே முடிந்தது. உதா:- இறுதிக்காட்சியில் அர்ஜூன் பேசும் தர்க்கங்கள், அடிக்கடி அர்ஜூன் “நான் சாத்தான்லே! சாத்தான்லே!” என்று கூறுவது ஒருகட்டத்திற்கு மேல் சிரிப்புமூட்டுவதாகவே ஆகிவிடுகிறது. அப்பாடா! ஒரே பத்தியில நான் முடிச்சிட்டதால் யாரும் இதை விமர்சனமுன்னு ஒத்துக்கமாட்டாங்க.


எனக்கு மிகவும் பிடித்தக்காட்சியை நான் இங்கே பகிர்ந்துக்கப்போறேன். கவுதமாகிய தாமஸ் தன் காதலி பியாவிடம் கூறுவாரே,
“பாவம்ன்னா என்னா தெரியுமா? ஒருத்தன கல்லைக்கட்டி அப்படியே கடல்ல தூக்கிப்போடுறது! அதான் பாவம்!, துப்பாக்கிய வச்சு அப்படியே மண்டையில சுட்டுத்தள்ளுறது! அதான் பாவம்! அருவாளால ஒருத்தன் தலைய அப்படியே சீவுறது! அது பாவம்! இது பல பாவங்களை பண்ணுன கை!” உடனே பியா சொல்லுவாள், “சரி சரி! இனிமே அப்படி பண்ணாத சரியா? நான் யார்க்கிட்டயும் சொல்லமாட்டேன்! உன்ன மன்னிச்சுட்டேன்”. உடனே அக்காட்சிகளில் இசைக்கருவிகள் நிறுத்தப்படும். ஒருவித அமைதிப்பரவும் தாமஸுக்கும் நமக்கும் தான். “பாவமன்னிப்பு, இரட்சிப்பு” போன்ற வார்த்தைகள் திருவிவிலியத்தின் கோட்பாடுகள். அதை நமக்கு உணர்த்த பல அதிகாரங்கள், வசனங்கள், சத்தியங்கள், உவமைகள் என்றிருந்தாலும் இக்காட்சி “ஜஸ்ட் லைக் தட்”டாக விளக்கிச்சென்றுவிடுகிறது. மன்னிப்பு கேட்பவன் மட்டும் குழந்தையாக மாறக்கூடாது, மன்னிப்பு தருபவனும் குழந்தையாக மாறவேண்டும். இப்படத்தில் கதாநாயகிக்கு குழந்தையின் மூளையென்று ஏற்கனவே சொல்லிவிடுவதால் அக்காட்சிக்கு அது மேலும் வலுசேர்க்கின்றது.

எனவே குழந்தையாக மாறுவோம், அனைவரையும் மன்னிப்போம். இறுதியில் படத்தை மொக்கையாக கொண்டுச்சென்ற மணிரத்னம்- ஜெமோ கூட்டணியையும் சேர்த்து!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கமல் vs இஸ்லாம் vs அரசு



கமல் சென்சிடிவ்வான விஷயங்களை தேடிப் போய் படமெடுத்து பிரச்சனையை ஏற்படுத்துவார் என்பது எதிர்பார்த்ததே!

'விஸ்வரூபமும்' அதுபோல் சர்வதேச படத்திற்குண்டான தகுதிக்காக, எளிதில் சென்சேஷன் ஏற்படுத்தக்கூடிய ஒருசில விஷயங்களில் ஒன்றை கையிலெடுத்ததால் அது விமர்சனத்திற்குள்ளாகும் என்பதும் எதிர்பார்த்ததே!

அப்படம் ரிலீசான உடனே மதவாதிகள் பிரச்சனை செய்து படத்தை வெளியிடக்கூடாதென்று போராடுவர் என்பதும் எதிர்ப்பார்த்ததே!


ஆனால் ஒன்றுமட்டும் யாரும் எதிர்பார்க்கவில்லை, அதுதான் தமிழக அரசின் Dirty politics game. இப்பிரச்சனையில் தன்னை அது எந்த நிலையில் பாவிக்கிறது? எது வரைக்கும் போராட தயாராக இருக்கிறது? அரசின் நோக்கம்தான் என்ன? இவ்வனைத்து கேள்விகளுக்கும் தனித்தனி பதில்களும் இருக்கலாம், ஒரே பதிலும் இருக்கலாம்! .........”ஓட்டு!!”

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

திரைக்கடல் ஓடி... ஹோட்டலை தேடு!



தமிழ்நாட்டை விட்டு வேறு இடங்களுக்கு சென்றாலே நாம் மிஸ் செய்யும் பல விஷயங்களுள் முக்கியமானது சாப்பாடு. ஏனெனில் ருசி, அறுஞ்சுவை போன்ற வார்த்தைகளையே நம் நினைவிலிருந்து அழித்துவிடும் கோரமான நாட்களவை. அதுவும் என்னைப்போன்று சமைக்கத்தெரியாதவர்கள் அதற்குண்டான பலனை சிறந்த ஹோட்டல்களை தேடுவதில் செலவளிக்கின்றனர். முதலில் ருசிக்காக சாப்பிடும் மனசு, பின்னர் சாப்பாட்டில் அத்தனை காசும் கரைந்துவிடக்கூடாதென நினைத்து குறைந்த செலவில் ஓக்கே ரக உணவை ஏற்றுக்கொள்கிறது. பின்னர் அதுவே படிப்படியாக குறைந்து, “என்னமோ! வயிற்றுப் பிரச்சனை வராமலிருந்தால் சரிதான்” என்பதிலேயே முடிகிறது. “மெல்ல நினைக்கின் பிணி பல” என்ற நாலடியார் பாடல் அர்த்தம் மாறி ஒலிக்கிறது.

சரி! இண்ட்ரோடக்ஷன் முடிஞ்சாச்சு. நாம இப்போ எந்த ஊர் சாப்பாடு பத்தி பார்க்கப் போறோம்ன்னா... “பெங்களூரு”. ”ஆமா அப்படியே இவரு உலகம் முழுக்க சுத்தி எல்லா சாப்பாட்டையும் சாப்பிட்டு பாத்துட்டாரு! நீ அந்த ஊர்ல தானடா இருக்க பக்கி!!” அப்படின்னு நீங்க நினைக்கிறது என் மனசுக்கு கேக்குது. எந்த விஷயத்தை ஆரம்பிக்கிற முன்னாடியும் நல்ல விஷயங்களை முதலில் சொல்லித்தான் ஆரம்பிக்கணும்ன்னு எங்க கம்பெனி செலவுல என்னை ட்ரெய்னிங்க்கு அனுப்பிவைத்த போது, அதுல எனக்கு பாடம் நடத்திய ஸ்ரீ ஸ்ரீ வாயிலபேருநுழையா சாஸ்திரிகள் சொல்லிருக்காரு.  எனவே பெங்களூரை பொறுத்தவரை எல்லா ஹோட்டல்கள் முதல் ரோட்டோர டீக்கடைகள் வரை குடிக்கக்கிடைக்கும் அருமையான பதார்த்தம் “பில்ட்டர் காபி”. இங்கே அனைவரும் பில்டர்களையே பயன்படுத்துகின்றனர். நம்மூர் மாதிரி ப்ரூ பொடி காபிகளே பயன்படுத்துவதில்லை. ஒரு உபரி தகவலை சொல்கிறேன். “காபி டே” பில்ட்டர்களை விட “பேயர்” பில்ட்டர்களே சுவை மிகுந்தவை. அது என்ன லாஜிக்கென்றெல்லாம் கேட்கக்கூடாது. அடுத்து இன்னொரு அட்டகாசமான ஆஃபர்- 1/2க்கும் முழு காபி/டீக்கும் அந்தளவு வித்தியாசம் இருப்பதில்லை. ஐந்து ரூபாயிலேயே நல்ல காபியை நல்லாவே குடிக்கலாம். சூர்யா, கார்த்திக்கு நான் போட்டியாக மாற விரும்பாததால் இத்துடன் காபியை முடித்துக்கொள்கிறேன்.



காலை உணவிலிருந்து ஆரம்பிக்கலாம். இந்த ஊரு மக்களுக்கு டிபன், லஞ்ச் என்றெல்லாம் வித்தியாசமே தெரிவதில்லை. காலங்காத்தாலேயே ஒருத்தர் புலாவ் கேட்கிறார், பிஸிபெல் பாத் (அதாம்பா சாம்பார் சாதம் மேல மிக்சர் போட்டு குடுப்பாங்க), அப்புறம் பரோட்டா ரெடியா என்று கேட்டு நம்மை திகைப்புக்குள்ளாக்குகிறார். இதையெல்லாம் தாண்டி நம்ம நாக்கு ருசிக்கு வேறு ஏதேனும் விதவிதமாக இருக்குதாவென்று தேடினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இட்லி, தோசை, பூரி அப்புறம்... அப்புறம்... வேற இருந்தாதானே? பொங்கலாகட்டும் இடியாப்பமாகட்டும் இந்த ஊர் மக்களுக்கு அதன் ருசியுணர எத்தனை ஆண்டுகளாகுமோ?? அதுவும் தோசையென்றால் ப்ளெய்ன், மசால், ஆனியன், ரவா அவ்வளவே! இதிலென்ன விசேஷமென்றால் எந்த ஹோட்டல் போனாலும் அவர்கள் தோசையின் தரத்தை ஒரேமாதிரி மெய்ண்டெய்ன் செய்வர், அதாவது  படுமட்டமாக சமைப்பதில். ஒரு தோசைக்கே அவர்கள் செலவிடுகிற எண்ணெயின் அளவை பார்க்கும்போது ஈரான், துபாய் போன்ற நாடுகளே கொந்தளிக்கும். பெங்களூருவின் தலைச்சிறந்த ஹோட்டல்களான மல்லேஸ்வரத்தின் ஹல்லிமனே போன்ற ஹோட்டல்களிலும் இதேநிலை தான்.

சிலசமயங்களில் தப்பிதவறி டிபன் நல்லாயிருந்தாலும் அதற்கு தரப்படும் சாம்பார் அந்த நாளையே கெடுத்துவிடும் சக்திவாய்ந்தது எனலாம். பின்ன இந்த ஊரில் சாம்பாருக்கு சர்க்கரை போடுவார்களென்ற விசயம் உலகறிந்ததே. பலநேரங்களில் குருமா, குழம்பு, ரசத்திற்கு கூட சர்க்கரையிட்டு அதிர்ச்சியளிப்பர். பொய் சொல்லக்கூடாது, இங்கு நன்றாகவே இட்லி அவிக்கின்றனர். நல்லவேளை வருணபகவான் அனைவருக்கும் பொதுவானவரே. அதுவும் இங்கு பேமஸானது “தட்டை இட்லி” சராசரியாக மூன்று சிறிய இட்லியின் சைஸில் இருக்கும். விலைக்கூட வெறும் பத்தே ரூபாய் தான். 

மதியநேரங்களில் தரப்படும் மீல்ஸ்களில் எங்குமே அன்லிமிட்டட் கலாச்சாரமே இல்லை. சிவ் சாகர், ஆனந்த பவன் போன்ற நடு-உயர்ரக ஹோட்டல்கள் விலை பரவாயில்லை. ஆனால் பல உயர்ரக ஹோட்டல்களில் மீல்ஸ் என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றனர். அதுவும் இங்கு எல்லா ஹோட்டல்களிலும் “ஆந்திரா ஸ்டைல்” என்ற போர்டை மட்டும் மாட்டிவிட்டு இருநூறு வரைக்கும் வசூலிக்கின்றனர். இந்த வட இந்திய உணவகங்கள் பண்ற அலும்பு தாங்க முடியாது. வெறும் ஒரு ரொட்டி/நாண், குழம்பு ஊத்துகிற சின்ன கிண்ணம் அளவே சோறு (அதுவும் நெய் சோறு) அப்புறம் ஒரு வெஜ் சைடிஷ், அதற்கு மேல் ரைஸ் வாங்கினால் எக்ஸ்ட்ரா காசு. இந்த ஐட்டத்திற்கு பெயர் ’தாளி’ என்ற தாலியறுப்பு.

இரவுநேரங்களில் மட்டுமே புற்றீசல் போல் திறக்கும் உணவகங்கள் பல. நிறைய வட இந்திய ஐட்டங்கள் சைவ மற்றும் அசைவங்களில் எல்லா வகைகளும் நல்ல நேர்மையான விலைப்பட்டியலோடு கிடைக்கும். அதிலும் ஒரு பிரச்சனை இருக்கு, ராத்திரி சாப்பிடுறதுன்னா 9 மணிக்கு முன்னாடியே கிளம்பிடணும். இல்லாட்டி அவர்கள் பாட்டுக்கு கடைய சாத்திட்டு போய்டுவர். பத்து மணிக்குமேல் ஒரு ஆளையும் ரோட்டில் பார்க்க முடியாது. பல ஹோட்டல்களில் பார்த்திருக்கிறேன், அங்கு சாப்பிடுகிறவர்கள் அதில் வேலைப் பார்க்கும் ஊழியர்கள் தான். “செல்ஃப் சர்வீஸ்” என்று சொல்கின்ற அர்த்தம் அப்போது தான் எனக்கு புரிந்தது. பெரிய/ புகழ்பெற்ற ஹோட்டல்களை தவிர மத்த சராசரி ஹோட்டல்களில் பிஸினெஸ் மிகவும் டல் தான்.

பெங்களூரை பொறுத்தவரை Rs.200க்கும் வயிற்றை நிரப்பிக்கொள்ளலாம் அல்லது  டீ/காபி Rs. 5 + தங்கத்துகள்கள் Rs. 6 = Rs. 11க்கும் வயிற்றை நிரப்பிக்கொள்ளலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

'தி டார்க் நைட் ரைசஸ்'- முப்பெரும் காவியங்களின் முடிவு

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஹீ-மேன், எக்ஸ்- மென் போன்ற பல ஹீரோக்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும். ஆனால் இவர்களை எல்லா இளைஞர்களுக்கும் பிடித்துவிடுமென்று சொல்லமுடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவரென்றால் அது நிச்சயம் Batman தான். ஏனெனில் அவருக்கு மற்ற ஹீரோக்களை போல் "சூப்பர் சக்திகள்" கிடையாது. அவரும் ஒரு சாதாரண மனிதன் தான். ஆனால் பலமும், அறிவும், பணமும் ஒருங்கே பொருந்திய மனிதன். இவர் கதைகள் மற்ற ஹீரோக்களின் 'ஒரே சாயல்' கதைகளை கூறாமல், சற்று வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருப்பதால் பெரியவர்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது. ஆனால் காமிக்ஸ் புத்தகங்கள், டிவி சீரியல்களிலும் மட்டுமே வெற்றிகரமாக வலம் வந்துக்கொண்டிருந்த பேட்மேன், டிம் பர்டனின் இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளிவந்த "பேட்மேன்" திரைப்படத்திற்கு பிறகு எந்தவொரு படமும் வெள்ளித்திரையில் சோபிக்கவில்லை, இதன் உச்சக்கட்டமாக, அக்காலத்தில் மிகப்பெரிய நடிகர்களாக கருதப்பட்ட ஜார்ஜ் க்ளூனி, அர்னால்ட் ஸ்க்வாஷ்நெகர் இவர்கள் நடித்து 1997ம் ஆண்டு வெளிவந்த "பேட்மேன் & ராபின்" படம் படுதோல்வியை சந்தித்தது. இதேமாதிரி பேட்மேனின் 'சைட்-கிக்'காக கருதப்பட்ட Cat woman-னை வைத்து எடுக்கப்பட்ட படமும் பாக்ஸ் ஆபீசில் பலத்த அடிவாங்கியது. அதன் பின்னர் பேட்மேனை சீண்டுவார் இல்லை, எங்கே சொந்த செலவில் சூனியம் வைத்து விடுவோமோ என்ற பயம். பின்னர் எட்டுவருடம் கழித்து முந்தைய பேட்மேன்களை விநியோகித்த வார்னர் சகோதரர்கள், இந்த முறை பல திறமையான இயக்குனர்களை கண்டறிந்து, அவர்களில் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் டேரன் அரணாஃப்ஸ்கையை கண்டறிந்து, நோலனை இறுதிசெய்தது. நோலனும் அவர்கள் நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படாத வண்ணம் மட்டும் பார்த்துக்கொள்ளாமல், பேட்மேனின் இழந்த பெருமைகளை மீட்டெடுத்தார்! இவர் பேட்மேன் சீரியஸில் இயக்கிய முதலிரண்டு படங்கள் "பேட்மேன் பிகின்ஸ்" மற்றும் "தி டார்க் நைட்" சூப்பர் ஹீரோ படங்களில் புது வரலாற்றையே படைத்தது எனலாம்! இரண்டாவது சொன்ன "தி டார்க் நைட்" எல்லோராலும் அவர்களுடைய 'ஆல் டைம் ஃபேவரிட்' சூப்பர் ஹீரோ படமாக தலையில் தூக்கிவைத்து கொண்டாடப்படுகிறது. அப்படத்தின் வில்லன் 'ஜோக்கர்' அந்த ஆண்டு ஆஸ்கர் விருதையும், பல பத்திரிக்கைகளில் டாப் வில்லன் ஆஃப் ஆல் டைம் விருதுகளையும் தட்டிச்சென்றார்.


'கிறிஸ்டோபர் நோலன்'- என்ற பெயரை சொன்னவுடன் ஞாபகம் வருவது 'புதுமை'. புதுமையென்றால் முதல்படத்தில் கதையில் ஆரம்பித்தவர், பின் அடுத்தப் படத்தில் திரைக்கதையில் புதுமை, எடிட்டிங், ஒளிப்பதிவு என்று அனைத்திலும் புதுமையை புகுத்திய தற்கால இயக்குனர். இவர் புதுமையோடு நின்றுவிடாது கதைகளில் ஒரு தனித்தன்மை இருக்கும். அதாவது, தன் முதல் படமாகிய 'ஃபாலோவிங்'கில் "கதைக்குள் கதை", 'மெமெண்டோ'வில் 'பின்னோக்கி மற்றும் முன்னோக்கி செல்லும் வெவ்வேறு திரைக்கதை", 'ப்ரெஸ்டீஜில்' "ப்ளாஷ்பேக்கிற்குள் ப்ளாஷ்பேக்", இன்செப்ஷனில் "கனவுக்குள் கனவு", 'பேட்மேன் பிகின்ஸில்' "பயம்" என்ற கருப்பொருள், 'டார்க் நைட்'டில் "திட்டத்திற்குள் திட்டம்" இப்படியாக அவரது ஒவ்வொரு படத்திலும் தனித்தன்மையான கருப்பொருட்கள் இருக்குமென்று நாம் அறிந்ததே. இப்படத்தில் என்ன கருப்பொருளை வைத்து எடுத்திருக்கிறார்?


"தி டார்க் நைட்" படத்தில் பேட்மேனுடைய பணியாள் ஆல்ஃப்ரெட், பர்மா திருடர்களை பற்றி ஒரு கதை சொல்வார். அந்த கதையை தெளிவாக கவனித்தாலே போதும்! அப்படத்தின் வில்லன் ஜோக்கரின் குணநலன்களை அறிந்துக் கொள்ளமுடியும். இதே கான்செப்ட்டை தான் மறுபடியும் இந்த படத்தில் (The Dark Knight Rises) செலுத்தியிருக்கிறார் இயக்குனர். இப்படத்தில் முகமூடி அணிந்து வில்லனாக காட்சியளிக்கும் பேன், (Bane) ஆல்ஃப்ரெட்டின் கதைப்படி அவன் சிறுவயதில் ஒரு பாழுங்கிணறு போன்ற தோற்றத்தில் உள்ள சிறையிலிருந்து தப்பிவந்தவன். அக்கிணற்றிலிருந்து அதுவரை யாரும் தப்பித்ததே இல்லையாம். எனவே, அச்சிறையின் இருளும், வலியும் அவனை கொடியவனாக மாற்றி, 'சித்ரவதை' என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தவன் ஆகிவிட்டான். எப்படி ஜோக்கர் முந்தைய படத்தில் "ஏஜென்ட் ஆஃப் கேயாஸ் (chaos)" ஆக வந்தானோ, இந்த படத்தில் பேன் ஒரு "ஏஜென்ட் ஆஃப் டார்ச்சர்". மக்களுக்கு தப்பிக்க ஒரு நம்பிக்கையை கொடுத்து, அதை எட்டா தூரத்தில் கொண்டுவைப்பதே இவனது வேலை. படம் முழுக்க உற்று கவனித்தால் இதே கான்செப்டை பல இடங்களில் 'செதுக்கியிருப்பார்' நோலன். 'செதுக்குகிறது' என்பதன் அர்த்தம் இந்த படம் பார்த்தப் பின்பு தான் புரிகிறது!


படத்தின் கதையை நான் சிம்ப்ளிஃபைட் செய்துக் கூறிவிடுகிறேன். கண்டிப்பாக ஸ்பாய்லர்கள் இருக்காது!! 'தி டார்க் நைட்' படத்தின் ஹார்வி டென்ட் இறந்து எட்டு வருடங்களாகிவிட்ட நிலையில், கோத்தம் நகரின் போலீஸ் கமிஷனர் கோர்டன் மக்களுக்கு பேட்மேன் கெட்டவரில்லையென்றஉண்மையை சொல்ல முயலுகிறார்! ஆனால் இன்னும் அந்த உண்மையை அறிய அம்மக்கள் தயாராகயில்லை என்று நினைத்து அதை ஒரு பேப்பரில் மறைத்து வைக்கிறார். பின்னர், பேன் என்ற கொடூர வில்லன், 'சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ்' படத்தில் ஹேனிபல் போன்று ஒரு முகமூடியை அணிந்து என்ட்ரி கொடுக்கிறார். முந்தைய ஜோக்கர் என்ட்ரி போல் சிறப்பாக இல்லாவிட்டாலும், அட்டகாசமாகவே இருக்கிறது! பின்னர் பல திட்டங்களுக்கு பின் பேட்மேனின் மனித உருவாகிய ப்ரூஸ் வெயினின் கம்பெனியிலிருந்து ஒரு அணு உலை இயந்தரத்தை அவன் கையகப்படுத்தி, அணுவை செயல்படுத்திவிடுகிறான்! பேட்மேன் அதிலிருந்து கோத்தம் நகரின் மக்களை எப்படி காப்பாத்துகிறார் என்பது தான் வெளிப்படையான கதை.

ஆனால் நிச்சயம் கதை இத்தோடு முடிந்துவிடவில்லை மற்றும் சொல்வதற்கு எளிதானதுமில்லை! ஒவ்வொரு காட்சியும் புதுப் புது சஸ்பென்ஸ்களோடும், ஆச்சரியங்களோடும் விரிகிறது. இப்படத்தின் முதல் ஹீரோ, வழக்கம்போல் எல்லோரும் சொல்கிறமாதிரி இயக்குனர் தான்! முதலில் அரைமணிநேரத்தில் கட்சிகள் சற்று கதைத் தேவைக்காக நிதானமாக சென்றாலும், அடுத்து பேட்மேன் இன்ட்ரோ ஆகும் சீன்களில் இருந்து விசில் பறக்கும் என்பது உறுதி. படத்தில் இன்னொரு ஆச்சரியம்- கதாப்பாத்திரங்கள்! கிட்டத்தட்ட பத்துக்கு மேற்பட்ட முக்கிய கதாப்பாத்திரங்கள் படத்தில் இருந்திருக்கும். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரையும் காட்சி சொறுகல்களாக காட்டாமல், ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கதைக்கு தேவைப்படுத்தி அவர்களை பேலன்ஸ் செய்த விதம்- இயக்குனரின் "திறமை" என்ற மூன்று எழுத்தில் அமர்த்திவைத்திட முடியாது. நோலன் வழக்கம்போல் எல்லாப் படங்களிலும் கடைபிடித்த யுக்தியையே இந்த படத்திலும் பெரிதும் பயன்படுத்தியிருக்கிறார். அதாவது, அவர் காட்டும் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அர்த்தம் பொதிந்திருக்கும். அது நமக்கு படம் முடியும் தருவாயில் தான் புலப்படும். எனவே இப்படத்தையும் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு தான் பார்க்க வேண்டியிருக்கும். எனவே தயாராகிக் கொள்ளுங்கள். தற்கால (contemporary) இயக்குனர்களான டேரன் அரணாஃப்ஸ்கை, டேவிட் பின்ச்சர், காய் ரிட்சி, நோலன் போன்றோர் ஒரு விஷயத்தில் திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். தங்கள் படங்களை மனித மனம் சார்ந்த (psychic) ரீதியாக ஆராய்வதில் கெட்டிக்காரர்கள். ஏனென்றால் இவர்கள் ஸ்டான்லி க்யூப்ரிக்கை தங்கள் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர்கள். இவர்களில் நோலன் மட்டும் கொஞ்சம் விசேஷம். படத்தை மட்டும் மனவியல் சார்ந்து ஆராயாமல் பார்க்கிற நமக்கும் அதே தாக்கத்தை ஏற்படுத்துவதில் வல்லவர். எனவே இவருடைய படங்கள் ஒருநாள் மட்டுமல்ல, படம் பார்த்து ரெண்டு மூன்று நாள்வரை மனதிற்குள் அலைபாய்ந்துக்கொண்டிருக்கும். இப்படத்தில் மேலே சொன்ன அந்த 'தியேட்டர் அனுபவங்கள்' மிகவும் வெற்றிப்பெற்றிருக்கிறது இந்தப்படத்தில். எனவே இந்த படமும் மற்றிரு படங்களை போல பாக்ஸ் ஆபீசில் சக்கைப் போடு போடுமேன்பது நிச்சயமே.


இப்படத்தில் ரெண்டாவது ஹீரோ பேட்மேன் தான். பரவாயில்லை! முந்தைய படத்தில் ஜோக்கருக்கு அடுத்து தான் பேசப்பட்ட பேட்மேன் இந்த படத்தில் இரண்டாமிடத்திற்கு முன்னேறியிருக்கிறார். இவர் வருகிற கட்சிகளை எண்ணிவிடலாம். ஆனால் ஒவ்வொரு சீனும் பட்டாசு, ஆங்கிலப் படமாக இருந்தாலும் இவர் பேசுகிற ஒவ்வொரு வசனத்திற்கும் கைதட்டல்களும், விசில் சத்தங்களும் பிளக்கிறது. எப்போதாவது பேசுவார். ஆனால் தமிழில் எழுதி மொழிமாற்றம் செய்யப்பட்ட பன்ச் வசனங்கள் போல்தான் பேசுவார். மற்ற நடிகர்கள், வில்லனாக வரும் 'டாம் ஹார்டி",கேட் வுமனாக 'ஆனி ஹேத்தவே', போலீசாக வருகிற 'கோர்டன் லீவிட்' போன்றோர்களின் கதாப்பாத்திர தேர்வு செம! லியாம் நீசனும், சிலியான் மர்ஃபியும் கௌரவ வேடத்தில் வருகிறார்கள். இவரைப் பற்றி சொல்லவில்லையென்றால் கதாப்பாத்திரங்களே நிறைவுப் பெறாது! அவர்தான் லூசியஸ் ஃபாக்சாக 'மோர்கன் ஃப்ரீமன்' மீண்டும் வருகிறார். அவர் பேசும் வசனங்கள் செம சென்ஸ் ஆஃப் ஹ்யூமர். அடுத்ததாக இப்படத்தின் இசையை முந்தைய படங்களில் இசையமைத்த 'ஹேன்ஸ் ஜிம்மரே' ஏற்றுக்கொண்டுள்ளார். மனிதன் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். உண்மையில் இவரது பின்னணி இசையில்லாமல் காட்சிகள் நிச்சயம் படம் பார்த்த நிறைவை தராது. கிணற்றில் இருந்து தப்பிக்கும்போது Deh-Shay, Deh-Shay, Bah Sah Rah. Bah Sah  Rah என்று மக்கள் ஏகோபிக்கும்போது, இளையராஜாவின் 'நான் கடவுள்' அறிமுக பாடலான "ஹர ஹர ஹர மகாதேவ்" பாடலை கேட்பது போல் அத்தனை ஆர்பாட்டம்! நிச்சயம் இப்படத்திற்காக பல விருதுகளை வெல்லுவார் என்பது திண்ணமே. படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இடத்தில தேவைப்பட்டாலும், தேவைக்காக கனக்கச்சிதமாக உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. முந்தைய படங்கள் போல் அல்லாமல் காட்சிகள் பல பகல் நேரங்களிலேயே வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் மற்ற படங்களை விட இது அதிக 'டார்க்-டோன்'.



ஒரு சினிமா அறிஞர் சொன்னார், "நல்லப் படங்களென்றால், மூன்று சிறந்த காட்சிகள் இருக்கவேண்டும் மற்றும் ஒரு மொக்கை காட்சிகளும் இருக்கக்கூடாது" இப்படத்தில் சிறந்த காட்சிகளை எண்ணுகிறேன். ஒரு நாலைந்திற்கு மேலிருக்கும் போல. படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளும் மிகவும் கவனித்து எடுத்திருக்கிறார். முடிவை மீண்டும் நம் கையிலேயே சிந்திக்க விட்டுவிடுகிறார். நிச்சயம் trilogy படங்களில் எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படும். ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் இதனை ரியாலிசமும், noir காட்சிகளும் இனிமேல் சாத்தியப்படாது. நோலனே மீண்டும் எடுத்தால் தான் உண்டு எனலாம். trilogy படங்களில் எனக்கு பிடித்த படங்களான டாய் ஸ்டோரி, லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் வரிசையில் நிச்சயம் இடம்பிடித்துவிட்டது. இனிமேல் வண்டியோட்டும் போது பைக்கின் டயர் மேலிருந்து கீழாக மாத்திரமல்ல, இடமிருந்து வலமாகவும் சுழலும்! இவ்வரி உங்களுக்கு புரிய கண்டிப்பாக போய் படம் பாருங்கள்!



மக்கள் மதிப்பீடு:  4.5/5
விமர்சகர்கள் மதிப்பீடு: 4/5

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குங்குமம் வலைப்பேச்சு -1

’குங்குமம்’ வார இதழில் வந்த என்னுடைய சில ட்வீட்கள்!

 என் ட்விட்டர் I.D- @vandavaalam

 

























































நன்றி: குங்குமம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நானும் விகடனும்...!

ஆனந்த விகடன் பத்திரிக்கையில் ’வலை பாயுதே’ என்னும் பகுதியில், கடந்த பிப்ரவரி 2012ம் ஆண்டில் முதல்முறையாக என்னுடைய ட்வீட்களில் ஒன்று வந்தது! அதன் பின்னரும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுவந்தது!

அந்த பகுதிகளில் சில உங்களுக்காக...

என்னுடைய ட்விட்டர் I.D- @vandavaalam


(எழுத்துக்கள் சிறியதாக இருப்பின், படத்தில் வலப்பக்கம் க்ளிக் செய்து, புதிய டேப்பில் திறந்துப் பார்க்கவும்!)







......................................................................................................................................................................
.....................................................................................................................................................................





......................................................................................................................................................................




......................................................................................................................................................................






......................................................................................................................................................................





.....................................................................................................................................................................



 ......................................................................................................................................................................




 .....................................................................................................................................................................






நன்றி: ஆனந்த விகடன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சாலை சங்கடங்கள்...

சாலையில் பயணிக்கும்போது நமக்கு நிறைய எரிச்சல் தரும் நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கலாம்.! எனக்கும் நிறைய ஏற்பட்டிருக்கிறது/ ஏற்பட்டுக்கொண்டேயிருக்கிறது! அவற்றில் நான் ஏற்கனவே எழுதியவை சில உங்கள் பார்வைக்காக இதோ...




 
எழில்மிகுந்த சாலை நெரிசலில் மேலும் அழகுச் சேர்ப்பவர்கள், நின்றுக்கொண்டிருக்கும் போதே 'ப்ள்ச்' என்று துப்புபவர்கள்! :/


பஸ், லாரிகள் சாலைக்குள் நுழையாத படி வழிகள் குறுகிவிட்டன.! கேட்டால் "சாலை விரிவாக்க திட்டமாம்!"


நம்மூர்ல எல்லா வண்டிகளும் 'ஆஃப் ரோட் வெஹிக்கிள்ஸ்' தான்!


ரோட்ல அரை மணிநேரத்துக்கு இருபது பேர் கேனத்தனமா வண்டி ஓட்டுறாங்கன்னா, நான் ஓட்டும்போது மட்டும் நாற்பது பேர் ஆகிடுறானுங்க!


ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஒரு 10 ரூபாய் டிக்கெட்தனம் இருக்கு! அது சிலசமயம் சிக்னல்ல போலீஸ் இல்லா நேரத்துல வெளிப்படும்!


வெகுதூரம் தெரியும் பச்சை நிற ட்ராபிக் சிக்னல், பக்கத்தில் சென்றதும் சிவப்பாகிவிடும்! இதுதான் "இக்கரைக்கு அக்கரை பச்சை!"


தமிழக சாலைகளை பொறுத்தவரை, குறைவான அலம்பல்கள் 'வேகத்தடை' மீது பயணிக்கும் போதே ஏற்படுகின்றது!


சாலையில் ஒலிக்கும் ஹாரன் சத்தத்தின் அலைவரிசைகளை வார்த்தையாக மாற்றினால், பல புதிய கெட்டவார்த்தைகளை அறியலாம்!


நம்மூர்ல மண்ண பரப்பி, ஜல்லிய கொட்டி, கொஞ்சம் சமன் படுத்துகிறதுக்கு மக்கள் வச்ச பேரு "ரோடு போடுறதாம்."   


சாலை எவ்வளவு குறுகலா இருந்தாலும், நடந்து போறவங்க பாதி வழியை அடைத்துதான் போகணும்ங்கறது எழுதப்படாத விதி போல!


வாழ்க்கையிலும், சாலையிலும் அவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்றால் கொல்லுவர் வார்த்தைகளாலும், ஹாரன்களாலும்!


சாலையோர வாகன பார்க்கிங், இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கத்திற்கு மாறும்போது தான், புதிய மாதம் பிறந்திருப்பதே தெரிகிறது!


80 கிமீ வேகத்தில வர்ற மண் லாரிய விட, ஒரு பக்கம் மட்டும் பார்த்து சாலையை கடக்கும் மண்ணு மடையர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்


சாலையில் வண்டியோட்டும் சிலரை, அளவுக்கதிகமா ஹாரன் அடித்த வழக்கில் கைது செய்யவேண்டும்.!


வறட்டு கவுரவ ஆசாமிகளை சாலையில் பார்க்கலாம்! அவர்கள் இன்டிகேட்டரும் போட்டு, ஹெட் லேம்ப்பும் எரியவிட்டு காரை திருப்புவர்!


ஆம்புலன்ஸ் பின்னே எஸ்கார்ட் போல் செல்கின்றவர்கள், வண்டிக்குள் ஒரு இடம் பார்த்து படுத்துக்கொள்வது நலம்! #சந்தர்ப்பவாதிகள்




                .......................................

 

 

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS